நடிகர் சியான் விக்ரம் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து சாதனை புரிந்தவர். சேது, காசி, பிதாமகன், ஐ போன்ற படங்களில் விக்ரமின் நடிப்பை யாராலும் மறக்க முடியாது. தற்போது விக்ரமின் மகன் துருவ் விக்ரம் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். துருவ் விக்ரம்  ஆதித்யா வர்மா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் இவர் அவரது தந்தை விக்ரமுடன் சேர்ந்து  மகான்  திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 சமீபத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஓடிடி தளத்தில் வெளியான மகான் திரைப்படத்தில் விக்ரம் மட்டும் துரு விக்ரம் இணைந்து நடித்தனர், இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் சீயான் 62 திரைப்படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. சீயான் விக்ரம்  பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கப் போவதாக சமீபகாலமாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் பா ரஞ்சித்  விக்ரமுக்கு இன்னும் படத்தின் கதையை சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.


இயக்குனர் பா ரஞ்சித் விக்ரமிடம், திரைக்கதையை இன்னும் தயார் செய்யவில்லை என்றும் இன்னும் கொஞ்ச நாள் பொறுத்து இருக்க வேண்டும் என்றும்  கூறியுள்ளார். இச்சமயத்தில் இயக்குனர் கௌதம் மேனன்  விக்ரமிற்காக ஒருபுறம் காத்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே கௌதம்  மேனன் விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் என்ற படத்தை இயக்கினார். ஆனால் துருவ நட்சத்திரம் படம் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக  சில காட்சிகள் எடுக்கப்பட முடியாமல் தடைபட்டது. 

முதலில் சியான் விக்ரமை வைத்து படம் இயக்குவதற்காக பல இயக்குனர்களும் காத்துக் கொண்டிருப்பார்கள், ஆனால் சமீபகாலமாக விக்ரமிற்கு எந்த படமும் சரியாக போகாததால் இயக்குனர்கள் விக்ரமை பெரிய அளவில்  கண்டுகொள்வதில்லை. அதனால் சியான்  தனக்கு நெருக்கமான இயக்குனர்களுக்கு கால் செய்து தன்னை வைத்து படம் எடுக்கும்படி  கேட்டு வருவதாக சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

Previous Post Next Post