கமல்ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விக்ரம்' திரைப்படத்தை நடித்து முடித்துவிட்டார் . இப்படத்தின் வெளியீட்டு தேதியை வரும் மார்ச் 14-ம் தேதி அறிவிக்கப்படும் என படக்குழு கூறியுள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தபோதே அடுத்தடுத்த படங்களுக்காக கதைகளைக் கமல்ஹாசன் கேட்டு வந்தார்.

அந்த வரிசையில் பா.ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன் ஆகியோரும் இருக்கின்றனர். மேலும் இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் 'இந்தியன் 2' படத்தின்  படப்பிடிப்பு வேறு பாக்கி இருக்கிறது. இதற்கிடையே அவருடைய ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும், கமலுடைய கதை, திரைக்கதையில் மலையாள  இயக்குனரான மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன்.

இயக்குநர் பா.ரஞ்சித் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் விக்ரமுடன் ஒரு படம் மற்றும் பாலிவுட்டில் 'பிர்சா முண்டா' பயோபிக்கும் அவர் வசம் இருக்கிறது.  இந்த இரண்டையும் முடித்துவிட்டுதான், கமல் படத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் வெற்றிமாறனும் 'வாடிவாசல்' படத்தை இயக்க இருக்கிறார்.

இதற்கு இடைப்பட்ட காலத்தில், கமல்ஹாசன்  அவர்கள் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது இயக்குநர் முத்தையா, 'விருமன்' படத்தை முடித்திருக்கிறார். மேலும்  இந்தக் கதையை கமல்ஹாசனுக்காக வைத்திருப்பதாகவும் கமல்ஹாசன் இந்தப் படத்திற்கு 25 நாள்கள் கால்ஷீட் கொடுப்பதாகச் சொன்னதாகவும் பேச்சுகள் கிளம்பியிருக்கின்றன. அப்படி கமல்ஹாசன் இந்தப் படத்தில்  நடித்தால், 'விருமாண்டி' படத்திற்கு பிறகு, அவர் நடிக்கும் கிராமத்து படம் இதுவாகத்தான் இருக்கும்.

Previous Post Next Post