புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள  திடீர் நகரை சேர்ந்தவர் கருப்பையா (59). இவர் கீரனூர் பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக வேலை செய்து  வந்துள்ளார். கருப்பையாவின் மனைவி இறந்த பின்பு அவர் தனது  மகன் பழனியுடன் வசித்து வந்துள்ளார். 


பழனியும் பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தனது தந்தையைப் போல் தனக்கும் நிரந்தர அரசுப் பணி வேண்டும் என்று விருப்ப பட்டுள்ளார். இந்த சூழலில் கருப்பையா, கடந்த 18-ம் தேதி  பேரூராட்சி அலுவலகம் அருகே மது போதையில் இறந்து கிடந்துள்ளார்.

 இதனையடுத்து அவரது உடலை  போலீசார் கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனையின் முடிவில் கருப்பையா விஷம் குடித்துள்ளதும், அவர் தாக்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கருப்பையாவின் மகானான பழனியின் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுக்க பழனியை கைது செய்து விசாரித்தனர்.


போலீஸ் விசாரணையில், இம்மாதம் இறுதியில் கருப்பையா வேலையில் இருந்து ஓய்வு பெற இருந்ததாகவும், அவருக்குப் பின் இந்த வேலை தனக்கே வரவேண்டும் என்ற ஆசையிலும் தந்தையை அவரது மகனே விஷம் வைத்துக் கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது. 

பழனி, அவரது நண்பர்  ஆனந்தன் என்பவரோடு இணைந்து மதுவில் விஷம் கலந்து கொடுத்துள்ளனர் , அந்த விஷம் கலந்த மதுவை குடித்துவிட்டு கருப்பையா சாகாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார் அப்பொழுது, நெஞ்சின் மீது கால் வைத்து மிதித்து கொலை செய்தது தெரியவந்தது.

 இதனையடுத்து கருப்பையாவின் மகன் பழனி மற்றும் அவரது நண்பர் ஆனந்தன் ஆகிய இருவரும் கீரனூர் போலீசாரால் கைது கைது செய்யப்பட்டு, கீரனூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post