கடந்த ஆண்டு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் மாநாடு. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது மேலும் 100 கோடி வசூல் சாதனையும் படைத்தது.

இப்படத்தின் பிரம்மாண்டம்  வெற்றியால் சிம்பு தற்போது பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார்.
சிம்பு நடிப்பில் அடுத்ததாக வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தலை ஆகிய படங்கள்  வெளியாக இருக்கிறது.

இதனை அடுத்து சிம்பு இயக்குனர் கோகுல் இயக்கவிருக்கும் கொரோனா குமார் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.  இப்படத்தின் அறிவிப்பு கடந்த வருடமே வெளிவந்தது.  ஆனால் தற்போது தான் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது.

இந்த படத்தில்  பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் சிம்புவுக்கு ஜோடியாக  நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில்  வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மாநாடு  படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லத்தனமான நடிப்பில் மிரட்டி இருப்பார். மாநாடு படத்தின்  மிகப்பெரிய வெற்றிக்கு எஸ் ஜே சூர்யாவின் வில்லத்தனமான நடிப்பும் ஒரு வகையில்  முக்கியமான காரணம் ஆகும். இதனால் சிம்பு கொரோனா குமார் படத்தில் நடிப்பதற்கு தனக்கு நிகரான ஒரு பெரிய வில்லன்  வேண்டும் என்று இயக்குனர் கோகுல் இடம் கூறியிருக்கிறார்.

இதனால் இயக்குனர் கோகுல், தற்போது வில்லன் வேடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும்  பகத் பாசிலிடம் கூறியிருக்கிறார் .



இயக்குனர் கோகுல் கூறிய இந்த கதை  பகத் பாசிலுக்கு ரொம்பவும் பிடித்து விட்டதாம். இதனால் கூடிய விரைவில் இவர்கள் கூட்டணியில் இப்படம் வெளியாகும்.

சமீபகாலமாக பகத் பாசில் வில்லனாக நடிப்பதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். அவர் நடிக்கும் வில்லன் கதாபாத்திரமும் அவருக்கு நல்ல பெயரை பெற்று தருகிறது.
இதனால் விஜய் சேதுபதி, எஸ் ஜே சூர்யாவிற்கு பின்  அடுத்ததாக தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பகத் பாசிலுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.



இந்த நிலைமையை பார்த்தால் பகத் பாசில்  தமிழ்நாட்டில் செட்டில் ஆகி விடுவார் போல.
ஏனென்றால் தற்போது இருக்கும் பல முன்னணி  ஹீரோக்களும் பகத் பாசிலை தான் வில்லனாக நடிக்க வைக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

Previous Post Next Post