தமிழ்  திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தில் இருப்பவர் இயக்குனர் சங்கர். இவரைப்போலவே பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை எடுத்து அதன் மூலமாக உலக அளவில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் இயக்குனர் ராஜமவுலி.

இயக்குனர் ராஜமவுலி  இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் (R R R) என்ற திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில்  மிகவும் ஆவலுடன் அனைவரும் எதிர்பார்த்த இந்த திரைப்படம் தற்போது சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.

 ராஜமௌலி ஒரு படம் இயக்கினால் அந்தப்படத்தில் பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. அதே போல் பிற மொழிகளில் இருக்கும் பல முன்னணி நடிகர்களையும் தன் படத்தில் நடிக்க வைத்து விடுவார். இதன் காரணமாகவே இவர் இயக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்யும்.

அந்த வகையில் ராஜமௌலி இயக்கிய அனைத்து  படங்களும் எல்லாதரப்பு ரசிகர்களையும் கவர்ந்து மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. சில தினங்களுக்கு முன்பு  ஆர்ஆர்ஆர் (R R R) திரைப்பட புரமோஷனுக்காக ராஜமௌலி மற்றும் படக்குழுவினர் அனைவரும் சென்னைக்கு வந்தனர். 

அப்போது ராஜமவுலியிடம் பத்திரிகையாளர்கள் அனைவரும்  பல கேள்விகளை கேட்டனர், அதற்கு ராஜமௌலி மிகவும் சுவாரசியமாக பதில் அளித்தார்.  மேலும் அவர், தமிழ் நடிகர்களை வைத்து பிரமாண்டமாக படம் இயக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாக இருக்கிறது என்றும் கூறினார்.

அதுவும் தமிழ் சினிமாவில் இருக்கும் இருபெரும் நடிகர்களான ரஜினி மற்றும் கமல் இருவரையும் ஒன்றிணைத்து ஒரு படமாவது இயக்கி விட வேண்டும் என்பது அவரின் தீராத ஆசை. அதாவது ரஜினி ஹீரோவாகவும் கமல் வில்லனாகவும்  வைத்து படம் இயக்க வேண்டும் என்பதே இதில் இன்னும் சுவாரசியம். இதற்காக  அவர் பிள்ளையார் சுழியையும் அந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது போட்டிருக்கிறார். 

Previous Post Next Post