சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான சூரரைப்போற்று , ஜெய் பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.
இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குனர் பாலா தற்போது சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்காக பிரம்மாண்டமான செட் மதுரையில் போடப்பட்டு வருகிறது. விரைவில் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.
மேலும் இப்படத்திற்காக கோவாவிலும் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு இருக்கிறது. ஆகவே இந்த சம்பவங்களை வைத்து இப்படத்தின் கதை இதுவாகத்தான் இருக்கும் என்று சிலர் கூறுகின்றனர். அதாவது இந்தப் படம் மீனவர்களை பற்றியும் அவர்களுக்கு நடக்கும் அநியாயங்களை பற்றியும் கூறுவதாக இருக்குமாம்.
மீனவர்களை பற்றிய படம் என்பதால் இப்படத்திற்காக கடல் சார்ந்த பகுதிகளான திருச்செந்தூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் பிரம்மாண்டமான செட் போடும் முடிவில் படக்குழு இருக்கின்றது. இயக்குனர் பாலாவின் படத்தில் குறிப்பிட்ட சில மக்களின் வாழ்வில் நடக்கும் தரமான சம்பவங்களை மையப்படுத்தி காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.
பாலாவின் முந்தைய படங்களான நான் கடவுள், தாரை தப்பட்டை, பரதேசி போன்ற படங்களிலும் இப்படி நிஜ சம்பவங்களை மையப்படுத்தி பல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோலவே இந்தப் படத்திலும் மீனவர்களின் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளது.
சமீபகாலமாக நடிகர் சூர்யா பல வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் சூர்யாவுக்கு இந்தப் படமும் மற்றுமொரு சிறந்த படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. தற்பொழுது படத்தின் கதை இதுதான் என்ற செய்தி வெளியாகியுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மேலும் இந்தப்படத்தில் ஜோதிகா, அதர்வா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இணைய உள்ளனர். இப்படத்தை விரைவில் தொடங்கி படப்பிடிப்பை விரைந்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
