திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் சொரகொளத்தூர் கிராமத்தில் தன்னுடைய விரோதியை முன்விரோதம் காரணமாக மின்சாரம் பாய்ச்சி கொள்ள முயன்றவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சொரகொளத்தூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கலசப்பாக்கம் அருகே சொரகொளத்தூர் என்ற கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜுக்கும்,ஏழுமலை என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் சரண்ராஜ் தன்னுடைய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மாட்டுக்கொட்டகையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஏழுமலை, உறங்கிக்கொண்டிருந்த சரண்ராஜை மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் ஏழுமலையை தாக்கியுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து ரேணுகோபால் என்பவர், ஏழுமலையை காப்பாற்ற முயற்சித்துள்ளார், அச்சமயம் ரேணுகோபாலயும் மின்சாரம் தாக்கியுள்ளது. இதனால் ஏழுமலை மற்றும் ரேணுகோபால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலசப்பாக்கம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.