திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

இவர், திருப்பூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் தங்கி விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், பிரதீப் தனது உறவினரான பழனியம்மாள் மற்றும் பழனிம்மாவின் 2 மகன்களான சஞ்சய், சரவணன் ஆகியோருடன் பைக்கில் திருப்பூரிலிருந்து சோமனூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

சுல்தான்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மீது இவர்கள் சென்று கொண்டிருந்த பைக் மோதி  விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பிரதீப் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பழனியம்மாளின் ஒரு கால் துண்டானது. அவருடைய மகன்களான சஞ்சய்   மற்றும் சரவணன் ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

பின்பு பிரதீப்பின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பழனியம்மாள்  மற்றும் அவரது 2 மகன்களை  காவல்துறையினர் மீட்டு திருப்பூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தனியார் மருத்துவமனையில்  பழனியம்மாள் சிகிச்சை பலனின்றி  பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post